மாவீரர்களின் இலட்சியங்களை அடைவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதே அவர்களுக்கான வீரவணக்கம்!!!!!
எம் மக்கள் பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களால் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது, எமது முன்னோர்கள் முன்னெடுத்த அகிம்சை வழி போராட்டங்கள் ஆயுத வன்முறையால் அடக்கியொடுக்கப்பட்ட போது, இறையாண்மையுடன் கூடிய சுதந்திர தமிழீழத்தை நிறுவும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டதில் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து ஒப்பற்ற தியாகங்களையும், உலகமே வியக்கும் வகையில் பல வெற்றிகளையும் நிகழ்த்தியவர்கள் எமது மாவீரர்கள். எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாது தாயக…









