தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!
27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான 46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.














