“வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெறும் தமிழின அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க மனித உரிமைகள் பேரவை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என அருட்தந்தை ஆ. குழந்தைசாமி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் அமைப்பின் சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ. குழந்தைசாமி அவர்கள் தனது உரையில்,
1948 ஆம் ஆண்டு திசம்பர் 9 ஆம் நாள் அன்று ஐ.நாவின் பொது அமர்வில் உருவாக்கப்பட்ட ‘இன அழிப்பினை தடுத்தலும் தண்டனையும’ என்ற அறிக்கை சமயம், இனம், இனக்குழு, நாடு ஆகியவற்றின் பெயரில் முழுமையாகவோ, ஒரு பகுதியாகவோ அழிக்கவேண்டுமென்ற நோக்கில் செய்தால் அது இன அழிப்பாக விளக்குகிறது.










