About US
Global Tamil Movement - GTM
தமிழர்கள் இவ்வுலகில் பலவேறு நாடுகளில் பல்வேறு தளங்களில் பரந்து விரிந்து வியாபித்து வாழ்கின்றார்கள். இற்றைக்கு ஐம்பாதியிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையும் பெருமையும்வாய்ந்த தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களையும் விழுமியங்களையும்கொண்ட, அறிவியலையும் வீரத்தையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டி முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி அர்ப்பணம் செய்த இவ்வுயரிய இனம் இன்று உலகெங்கும் அகதியாக அடிமையாக ஏதுமற்ற ஏதிலிகளாக நாடோடிகளாக வேரறுந்து இனக்கலப்படைந்து வாழ்கின்றது. பௌத்த பேரினவாத சக்திகளின் கொள்கைகளினாலும், காலனித்துவ அடக்குமுறையாளர்களினாலும் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் ஏதிலிகளாக்கப்பட்டார்கள். இன்றும் உலகின் பல பாகங்களில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள். திட்டமிட்ட வடிவமைக்கப்பட்ட ஓர் இனவழிப்பிற்கும் உள்ளாகப்படுகின்றார்கள். தமிழர் தாயகமான தமிழீழத்தில் 2009 வரை இடம்பெற்றதும் அதனைத்தொடரந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சிபீடமேறிய சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படுவது திட்டமிட்ட தமிழின அழிப்பேயாகும். இதுவே எமது நிலைப்பாடாகும்.
தமிழீழம் என்பது இன்றைய பூகோள அரசியல் ஒழுங்கில் தமிழகத்திற்கு அடுத்ததான தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்று மரபுவழிவந்த தாயகமாகும். இத்தகைய பெறுமதிமிக்க உன்னதமான உயரிய எம் தாயகத்தை அன்னிய சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எமது பேரம்பேசும் சக்தியையும் இறையாண்மையையும் கட்டியமைத்து நிர்வாகம் செய்த எம் தமீழீழ நிகழ் அரசை தமது பூகோள நலன்களுக்காக பிராந்திய நாடுகளும் வல்லரசுகளும் அழிக்க திட்டமிட்டார்கள். இலங்கைத்தீவில் தமது நலன்களுக்கேற்ப ஒற்றை ஆட்சியை அமைத்து தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை இல்லாமல் செய்யவே பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற வல்லரசுகளும் இன்னும்பல நாடுகளும் தமது நலன்களுக்காக சிங்கள பேரினவாத அரசிற்கு முண்டுகொடுத்து போட்டி போட்டு தமிழர்களை அழித்து எம் கட்டுமானங்களை சிதைத்தார்கள். மேலும் தாய்த் தமிழகத்திலும் தமிழர்களை அடக்கியொடுக்குவது இன்று நாளாந்த நடவடிக்கையாகிவிட்டது.
திட்டமிட்ட இனவழிப்பின் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட எமது தமிழீழத்தின் இறையாண்மையை பேரம்பேசுதலுக்கிடமற்ற எமது தொடரச்சியான போராட்டங்களின் ஊடாக மீட்டெடுத்து தமிழீழத் தனியரசை நிறுவுதலும் உலகெங்கும் பரந்துவாழும் 12 கோடி தமிழர்களின் உரிமைகளுக்காக வினைத்திறனுடன் போராடுவதே எமது உயரிய நோக்கமாகும்.
- சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தனித் தமிழீழ நாடொன்றே தமிழ் மக்களின் ஏகோபித்த ஒரே தீர்வென்று பேரம்பேசுதலுக்கிடமற்று” நந்திக்கடல் கோட்பாட்டில் ” விட்டுக்கொடுப்பற்று ” பொதுவுடமை தன்னாட்சி தமிழீழத்தை“அடைய புரட்சிகர விடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கும் தரப்பினரும் எம்முடன் இணைந்து கைகோர்த்து ஒன்றுபட்ட சக்தியாக பயணிக்கலாம்.
- தமிழீழம் என்ற தேவை 12 கோடி தமிழர்களினதும் ஒட்டுமொத்த தேவை என்ற அடிப்படையான புரிதலை தமிழ்மக்கள் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் கொண்டுபோய்சேர்பதும் அதனூடாக 12 கோடி தமிழர்களும் சங்கமிக்கும் மாபெரும் தமிழ்தேசிய அரசியலை கட்டியமைப்பதும் , கட்டிக்காப்பதும் எமது உயரிய இலக்காகும்.
- இதனூடாக அறிவும்,வீரமும்,விவேகமும் நிறைந்த புரட்சிகரமான சனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்தும் சர்வதேச பரிமானத்தை உருவாக்குவதுமே எமது கொள்கையாகும்.
- உலகளாவிய ரீதியில் விடுதலைக்காகவும்,அடிப்படை அரசியல் உரிமைகளுக்காகவும் போராடும் அனைவருடனும் நாம் கரம்கோர்த்து பயணிப்போம்.
- தமிழர்களுடையகலை, பண்பாடு,அரசியல், பொருளாதாரம், வரலாறு, ஒழுக்கநெறி, மொழி, தமிழர்தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற அடிப்படைரீதியான அனைத்து மேம்பாடுகளுக்காகவும் நாம் உரத்துக்குரல்கொடுப்போம்.
எமது வேலைத் திட்டங்கள் அனைத்தையும் எமது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.tamilmovement.com இல் அறிந்துகொள்ளலாம்.




