<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Press Releases &#8211; Tamil Movement</title>
	<atom:link href="https://tamilmovement.com/category/press-releases/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilmovement.com</link>
	<description>Tamil Movement</description>
	<lastBuildDate>Fri, 04 Mar 2022 01:27:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.3.1</generator>

<image>
	<url>https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/cropped-GlobalMovementFavicon-32x32.png</url>
	<title>Press Releases &#8211; Tamil Movement</title>
	<link>https://tamilmovement.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%-2/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Tamilmovement]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 01:27:33 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=4021</guid>

					<description><![CDATA[தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள் தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்</p>
<p>தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால், 60 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220 ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம் பெற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து கடந்த மாதம் எழுத்து மூல அறிக்கை ஒன்று ஐ.நா விற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கை 25.02.2022 அன்று ஐ.நா பொதுச் சபையினால் அங்கீகரித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அவ் அறிக்கையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டியும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் அறிக்கை உலகத் தமிழர் இயக்கத்தின் அயராத முயற்சிக்கும், ஈழத்தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.</p>
<p>அவ் அறிக்கையின் சாராம்சம் :</p>
<p>ஈழத்தமிழர்கள் கடந்த 70 வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகிற ஒவ்வொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இந்த மனோபாவமே தமிழின அழிப்பிற்கு வழிவகுத்தது.</p>
<p>70 000 இற்கும் மேற்பட்டவர்கள் 2009ல் கொல்லப்பட்டார்கள் என்ற குறைந்த பட்ச எண்ணிக்கையை ஐ.நா.வின் 2012ன் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதேவேளை 1 46 679 நபர்கள் எண்ணிக்கையில் காணவில்லை என மறைந்த முன்னாள் மன்னார் பேராயர் ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் உறுதி செய்யப்பட்டது. பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதுகாப்பு வலையமென அறிவிக்கப்பட்ட இடங்களான மருத்துவ மனைகளிலும், பாடசாலைகளிலும் வைத்தே சிறீலங்கா அரசபடைகளால் போர் விமானங்களினாலும் எறிகணைகளினாலும் தாக்கிக் கொல்லப்பட்டனர்.</p>
<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதற்கான ஐ.நா சபை செயற்குழு நிறுவியுள்ளது.</p>
<p>ஐ.நா.வின் 10 விசேட பொறிமுறை ஆய்வாளர்கள் குழுவொன்று கடந்த யனவரி 2021ல் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் காரசாரமான அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்கள்.</p>
<p>மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் ஆணையாளர்களும் போர் முடிந்தும் 13 வருடங்களாக உள்நாட்டு பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை.</p>
<p>இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைகள், நினைவுகூறல்களுக்கு தடை போன்ற விடயங்களும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஐ.நா உட்பட உறுப்பு நாடுகளிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; பெப்ரவரி 10 2015ல் நிறைவேற்றப்பட்ட வடமாகாண சபையின் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.</p>
<p>&#8211; ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பை முறையான வழியில் விசாரிக்க வேண்டும் அத்துடன் ஐ.நா வின் 30/1 தீர்மானத்தையும் வலுவானதாக மாற்ற வேண்டும்.</p>
<p>&#8211; பாதிக்கப்பட்ட தமிழர்கள் சிறீலங்கா அரசின் உள்நாட்டு பொறிமுறைகளை ஒருபோதும் நம்பவில்லை, சிறீலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்.</p>
<p>&#8211; தமிழர்கள் மேல் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் ஒரு விசேட பிரதிநிதியை அங்கத்துவ நாடுகள் நியமனம் செய்ய வேண்டும்.</p>
<p>&#8211; விடுதலைப்புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி வடக்கிலும் கிழக்கிலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது செய்யப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.</p>
<p>ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்களிடமும், ஒப்பந்த அமைப்பு நிபுணர்களிடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது நியாயமான நீதி கோரும் போராட்டங்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவதுடன் அவர்கள் எந்தவொரு இடர்களும் இல்லாமல் தங்களது போராட்டங்களை முன்னெடுக்கவும் வழிவகுக்க வேண்டும்.</p>
<p>&#8211; எவ்வித காரணங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும்.</p>
<p>ஐ.நா பொதுச்சபையின் நான்காவது ஆணையம் என்றழைக்கப்படும் விசேட அரசியல் மற்றும் காலணித்துவ நீக்கத்திற்கான ஆணையத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:</p>
<p>&#8211; தமிழீழத்தை சுயநிர்ணய உரிமைக்காக போராடும் நாடுகளின் பட்டியலில் இணைக்க வேண்டும்.</p>
<p>&#8211; நான்காவது ஆணையத்தின் முன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கோரி, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அறிக்கைகளை செவிசாய்த்து நேரில் சென்று பார்வையிடும் பணிகளை பொறுப்பெடுத்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமிழ் பிரதேசத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி நிலமைகளைப்பற்றிய ஆய்வுக் கருத்தரங்குகளை நிறுவ வேண்டும்.</p>
<p>இவ்வாறாக அவ் அறிக்கையின் பிரதான அம்சங்கள் அமைந்திருந்தன.</p>
<p>இதேபோன்று கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40வது கூட்டத்தொடரில் பாரதி அமைப்பினால் ஈழத்தமிழர் வரலாற்றில் முதன்முறையாக 118 இற்கும் அதிகமான ஐ. நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 3000 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடனும் இரு அறிக்கைகளும், கடந்த 2021ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் 192 ஐ.நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு அறிக்கையும் ஐ.நா விற்கு சமர்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>பன்னாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கை மனுவானது அனைத்துலக அரங்கில் ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே அரசியல் அவதானிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகின்றது.</p>
<p>குறிப்பாக தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இக் கோரிக்கை மனுவானது சிறீலங்கா சார்ந்த ஐ.நா வின் தீர்மானங்களிலும் சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளிலும் தாக்கம் செலுத்தும் காரணியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அத்துடன் இக் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள அமைப்புக்களால் இவ் விடையமானது தமது நாட்டு மக்கள் மத்தியிலும் மற்றும் அரச தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது. இச் செயற்பாடானது ஈழத் தமிழர் பிரச்சனை உலகளாவிய ரீதியாக பல்லின மக்களிடையேயும் பன்னாட்டு அரச தரப்பினரிடையேயும் ஓர் முக்கிய பேசு பொருளாக்கப்பட்டுள்ளதானது, எம் இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் ஓர் முக்கிய படிக்கல்லாகும்.</p>
<p>இத்தருணத்தில் இவ் அறிக்கையினை<br />
ஐ.நா மன்றில் சமர்ப்பித்த மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைத்து பன்னாட்டு அமைப்புகளிற்கும் உலகத் தமிழர்கள் சார்பில் உலகத் தமிழர் இயக்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அதேவேளை உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த அறிக்கையினை நீங்கள் வாழும் நாடுகளின் அரசியல் தளங்களுக்கு எடுத்துச்சென்று ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>நன்றி</p>
<p>பாரதி அமைப்பு<br />
உலகத் தமிழர் இயக்கம்</p>
<p>உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு அமைப்புகளினால் ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை <img src="https://s.w.org/images/core/emoji/14.0.0/72x72/1f447.png" alt="👇" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /></p>
<p>https://drive.google.com/file/d/1fwld1KZ5vgGvjYPT1QkAvuJDEskRIr0d/view?usp=sharing</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Tamilmovement]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 01:21:43 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=4018</guid>

					<description><![CDATA[தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால்,&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால், 60 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220 ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம் பெற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து கடந்த மாதம் எழுத்து மூல அறிக்கை ஒன்று ஐ.நா விற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கை 25.02.2022 அன்று ஐ.நா பொதுச் சபையினால் அங்கீகரித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அவ் அறிக்கையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டியும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் அறிக்கை உலகத் தமிழர் இயக்கத்தின் அயராத முயற்சிக்கும், ஈழத்தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.</p>
<p>அவ் அறிக்கையின் சாராம்சம் :</p>
<p>ஈழத்தமிழர்கள் கடந்த 70 வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகிற ஒவ்வொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இந்த மனோபாவமே தமிழின அழிப்பிற்கு வழிவகுத்தது.</p>
<p>70 000 இற்கும் மேற்பட்டவர்கள் 2009ல் கொல்லப்பட்டார்கள் என்ற குறைந்த பட்ச எண்ணிக்கையை ஐ.நா.வின் 2012ன் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதேவேளை 1 46 679 நபர்கள் எண்ணிக்கையில் காணவில்லை என மறைந்த முன்னாள் மன்னார் பேராயர் ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் உறுதி செய்யப்பட்டது. பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதுகாப்பு வலையமென அறிவிக்கப்பட்ட இடங்களான மருத்துவ மனைகளிலும், பாடசாலைகளிலும் வைத்தே சிறீலங்கா அரசபடைகளால் போர் விமானங்களினாலும் எறிகணைகளினாலும் தாக்கிக் கொல்லப்பட்டனர்.</p>
<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதற்கான ஐ.நா சபை செயற்குழு நிறுவியுள்ளது.</p>
<p>ஐ.நா.வின் 10 விசேட பொறிமுறை ஆய்வாளர்கள் குழுவொன்று கடந்த யனவரி 2021ல் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் காரசாரமான அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்கள்.</p>
<p>மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் ஆணையாளர்களும் போர் முடிந்தும் 13 வருடங்களாக உள்நாட்டு பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை.</p>
<p>இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைகள், நினைவுகூறல்களுக்கு தடை போன்ற விடயங்களும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஐ.நா உட்பட உறுப்பு நாடுகளிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; பெப்ரவரி 10 2015ல் நிறைவேற்றப்பட்ட வடமாகாண சபையின் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.</p>
<p>&#8211; ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பை முறையான வழியில் விசாரிக்க வேண்டும் அத்துடன் ஐ.நா வின் 30/1 தீர்மானத்தையும் வலுவானதாக மாற்ற வேண்டும்.</p>
<p>&#8211; பாதிக்கப்பட்ட தமிழர்கள் சிறீலங்கா அரசின் உள்நாட்டு பொறிமுறைகளை ஒருபோதும் நம்பவில்லை, சிறீலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்.</p>
<p>&#8211; தமிழர்கள் மேல் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் ஒரு விசேட பிரதிநிதியை அங்கத்துவ நாடுகள் நியமனம் செய்ய வேண்டும்.</p>
<p>&#8211; விடுதலைப்புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி வடக்கிலும் கிழக்கிலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது செய்யப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.</p>
<p>ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்களிடமும், ஒப்பந்த அமைப்பு நிபுணர்களிடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது நியாயமான நீதி கோரும் போராட்டங்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவதுடன் அவர்கள் எந்தவொரு இடர்களும் இல்லாமல் தங்களது போராட்டங்களை முன்னெடுக்கவும் வழிவகுக்க வேண்டும்.</p>
<p>&#8211; எவ்வித காரணங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும்.</p>
<p>ஐ.நா பொதுச்சபையின் நான்காவது ஆணையம் என்றழைக்கப்படும் விசேட அரசியல் மற்றும் காலணித்துவ நீக்கத்திற்கான ஆணையத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:</p>
<p>&#8211; தமிழீழத்தை சுயநிர்ணய உரிமைக்காக போராடும் நாடுகளின் பட்டியலில் இணைக்க வேண்டும்.</p>
<p>&#8211; நான்காவது ஆணையத்தின் முன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கோரி, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அறிக்கைகளை செவிசாய்த்து நேரில் சென்று பார்வையிடும் பணிகளை பொறுப்பெடுத்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமிழ் பிரதேசத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி நிலமைகளைப்பற்றிய ஆய்வுக் கருத்தரங்குகளை நிறுவ வேண்டும்.</p>
<p>இவ்வாறாக அவ் அறிக்கையின் பிரதான அம்சங்கள் அமைந்திருந்தன.</p>
<p>இதேபோன்று கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40வது கூட்டத்தொடரில் பாரதி அமைப்பினால் ஈழத்தமிழர் வரலாற்றில் முதன்முறையாக 118 இற்கும் அதிகமான ஐ. நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 3000 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடனும் இரு அறிக்கைகளும், கடந்த 2021ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் 192 ஐ.நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு அறிக்கையும் ஐ.நா விற்கு சமர்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>பன்னாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கை மனுவானது அனைத்துலக அரங்கில் ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே அரசியல் அவதானிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகின்றது.</p>
<p>குறிப்பாக தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இக் கோரிக்கை மனுவானது சிறீலங்கா சார்ந்த ஐ.நா வின் தீர்மானங்களிலும் சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளிலும் தாக்கம் செலுத்தும் காரணியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அத்துடன் இக் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள அமைப்புக்களால் இவ் விடையமானது தமது நாட்டு மக்கள் மத்தியிலும் மற்றும் அரச தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது. இச் செயற்பாடானது ஈழத் தமிழர் பிரச்சனை உலகளாவிய ரீதியாக பல்லின மக்களிடையேயும் பன்னாட்டு அரச தரப்பினரிடையேயும் ஓர் முக்கிய பேசு பொருளாக்கப்பட்டுள்ளதானது, எம் இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் ஓர் முக்கிய படிக்கல்லாகும்.</p>
<p>இத்தருணத்தில் இவ் அறிக்கையினை<br />
ஐ.நா மன்றில் சமர்ப்பித்த மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைத்து பன்னாட்டு அமைப்புகளிற்கும் உலகத் தமிழர்கள் சார்பில் உலகத் தமிழர் இயக்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அதேவேளை உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த அறிக்கையினை நீங்கள் வாழும் நாடுகளின் அரசியல் தளங்களுக்கு எடுத்துச்சென்று ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>நன்றி</p>
<p>பாரதி அமைப்பு<br />
உலகத் தமிழர் இயக்கம்</p>
<p>உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு அமைப்புகளினால் ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை <img src="https://s.w.org/images/core/emoji/14.0.0/72x72/1f447.png" alt="👇" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /></p>
<p>https://drive.google.com/file/d/1fwld1KZ5vgGvjYPT1QkAvuJDEskRIr0d/view?usp=sharing</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Standaktion &#8211; Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!!</title>
		<link>https://tamilmovement.com/standaktion-voelkermord-an-tamilen-in-sri-lanka-geht-weiter/</link>
					<comments>https://tamilmovement.com/standaktion-voelkermord-an-tamilen-in-sri-lanka-geht-weiter/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 06 May 2021 17:22:53 +0000</pubDate>
				<category><![CDATA[Projects]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/standaktion-voelkermord-an-tamilen-in-sri-lanka-geht-weiter/</guid>

					<description><![CDATA[Standaktion Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!! Am 18. Mai begehen das weltweite tamilische Volk jährlich den &#60;&#60;Tamilischen Völkermord Gedenktag&#62;&#62;. In Sri Lanka übt die singhalesische Regierung seit über 60 Jahren einen systematischen Völkermord an den Tamilen aus. Am 18 Mai 2009 erreichte die Brutalität der singhalesischen Regierung mit dem Ende des Bürgerkriegs&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p>Standaktion</p>
<p>Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!!</p>
<p>Am 18. Mai begehen das weltweite tamilische Volk jährlich den &lt;&lt;Tamilischen Völkermord Gedenktag&gt;&gt;.</p>
<p>In Sri Lanka übt die singhalesische Regierung seit über 60 Jahren einen systematischen Völkermord an den Tamilen aus. Am 18 Mai 2009 erreichte die Brutalität der singhalesischen Regierung mit dem Ende des Bürgerkriegs ihren vorläufigen Höhepunkt.</p>
<p>Der bewaffnete Krieg ist vorbei, aber der sogenannte, systematische, stille und strukturelle Völkermord an Tamilen hat bis heute keine Ende. Nach wie vor wird das tamilische Volk unterdrückt, seine Exponenten werden verfolgt, gefoltert und aufs übelste erniedrigt. Die Schweiz handelt mit dieser Völkermord- Regierung verschiedene Abkommensverträge aus und zugleich ignoriert und schweigt sie weiterhin den andauernden Völkermord an Tamilen. Angesicht dieses Völkermord- Gedenktages möchten wir mit dieser Standaktion den schweizerischen Öffentlichkeit auf diese unbeschreibliche Tragödie aufmerksam machen, welcher das tamilische Volk seit Jahrzehnten ausgesetzt ist, und so diesen bis heute andauernden strukturellen Genozid thematisieren.</p>
<p>Gemeinsam gegen den tamilischen Genozid in Sri Lanka!</p>
<p>Wann:<br />
Mittwoch, 12. Mai 2021,<br />
von 14:30 bis 18.30 Uhr</p>
<p>Wo:<br />
Zürich 1, Bahnhofstrasse, gegenüber 84 vor Pestalozzianlage</p>
<p>Kontakt:</p>
<p>+41 79 260 33 42 &#8211; Deutsch und Tamilisch<br />
+41 78 218 88 30 &#8211; Deutsch und Tamilisch<br />
+41 78 403 02 74 &#8211; Tamilisch</p>
<p>&nbsp;</p>
<p><img decoding="async" fetchpriority="high" class="alignnone wp-image-3030" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-267x300.jpeg" alt="" width="1017" height="1143" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-267x300.jpeg 267w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-910x1024.jpeg 910w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-768x864.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-1365x1536.jpeg 1365w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-133x150.jpeg 133w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56.jpeg 1422w" sizes="(max-width: 1017px) 100vw, 1017px" /><img decoding="async" class="alignnone wp-image-3034" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-267x300.jpeg" alt="" width="1016" height="1142" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-267x300.jpeg 267w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-910x1024.jpeg 910w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-768x864.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-1365x1536.jpeg 1365w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-133x150.jpeg 133w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13.jpeg 1422w" sizes="(max-width: 1016px) 100vw, 1016px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/standaktion-voelkermord-an-tamilen-in-sri-lanka-geht-weiter/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மனித உரிமை பாதுகாவலர் மற்றும் உண்மையின் குரல் ஆண்டகை இராயப்பிற்கு எமது கண்ணீர் இரங்கல்</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Apr 2021 12:43:38 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Press Releases]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=1971</guid>

					<description><![CDATA[அருள்மிகு முனைவர்; இராயப்பு ஏப்ரல் 1 2021 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார். தமிழினப்படுகொலையால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் மனிதவுரிமை பாதுகாவலராக திகழ்ந்த இவரின் தலைமையில் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களின் அதிகாரம், தெரிவுநிலை மற்றும் பாதுகாப்பு வலுவூட்டப்பட்டது. 132 ECOSOC அங்கீகாரம் பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட 3200 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப்பிற்கு இரங்கல் செலுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் இணைந்து தமிழர் இயக்கமும் ஆண்டகை இராயப்பு&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">அருள்மிகு முனைவர்; இராயப்பு ஏப்ரல் 1 2021 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார்.<span id="more-1971"></span><img decoding="async" class=" wp-image-1978 alignright" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-197x300.jpg" alt="" width="220" height="335" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-197x300.jpg 197w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-674x1024.jpg 674w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-768x1168.jpg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-1010x1536.jpg 1010w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-99x150.jpg 99w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep.jpg 1280w" sizes="(max-width: 220px) 100vw, 220px" /></p>
<p style="text-align: justify;">தமிழினப்படுகொலையால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் மனிதவுரிமை பாதுகாவலராக திகழ்ந்த இவரின் தலைமையில் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களின் அதிகாரம், தெரிவுநிலை மற்றும் பாதுகாப்பு வலுவூட்டப்பட்டது.</p>
<p style="text-align: justify;">132 ECOSOC அங்கீகாரம் பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட 3200 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப்பிற்கு இரங்கல் செலுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் இணைந்து தமிழர் இயக்கமும் ஆண்டகை இராயப்பு ஜோசப்பின் குடும்பத்தாருக்கும், அனைத்து தமிழர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p>
<p style="text-align: justify;">அனைத்துலக சட்டத்தை மதித்து அவைகள் இலங்கையிலும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், மனிதவுரிமைகளின் உலகளாவியத் தன்மை, சமநிலமை மற்றும் பாதிக்கப்பட்வர் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் ஆகியவற்றையும் நமக்கு நினைவூட்டி ஈழத்தமிழர்களிடமும் மற்றும் சர்வதேச சமூகத்தினரிடமும்; அவர் எப்போதும் தமிழினவழிப்பின் நீதி கோரி ஒரு வலுவான குரலாக இருந்து வந்திருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">மிகவும் எளிமையாக சொல்லப்போனால், அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப் நம்மில் ஒருவராக இருந்து, இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலையில் தப்பியவர்களுக்கு எப்போதும் தைரியமான உறுதியான குரலாக இருந்து வந்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">அச்சம் இல்லாமல் எவரினது தயவும் இல்லாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகத்தான அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியோடு இங்கும் அங்குமுள்ள அனைவரின் சார்பாக பேசும் ஒரு வலுவான எடுத்துரையாளராக அவர் இருந்திருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">கத்தோலிக்கரின் மிக முக்கியமான மனித உரிமை பாதுகாவலராக மட்டுமல்லாது அவரது தலைமையில் தமிழ் மனிதவுரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழினப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் ஆகியோரின் அதிகாரம், தெரிவுநிலை மற்றும் பாதுகாப்பிற்கு இவ்வாறு அவர் பங்களித்தருக்கின்றார். மேலும் அவரது கடைசி மூச்சு வரை உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் மேற்கொண்ட மனிதாபிமான சேவைகள் போற்றத்தக்கன.</p>
<p style="text-align: justify;">அவரது பணிகள் பெரும்பாலும் கடினமாக இருந்தபோதிலும், அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப் தனது பதவிக்காலம் முழுவதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளையும், தமிழ் உரிமை பாதுகாவலர்களின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளையும், மற்றும் சிவில் சமுதாயத்தின் பங்களிப்பையும் உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலும் வலுவூட்ட அடிப்படை அடித்தளமாக செயல்பட்டுள்ளார்;.</p>
<p style="text-align: justify;">சுயாதீன நிபுணர்கள் மற்றும் சர்வதேச புத்திஜீவிகளுடன் இணைந்து உண்மையைக் கண்டறியும் பணியை அவர் வழிநடத்தினார். யுத்த வலயத்தில் உள்ள மக்கள் தொகை மற்றும் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்த மக்கள் தொகை தொடர்பான மாவட்ட அளவிலான இலங்கை அரசு துறைகளால் வெளியிடப்பட்ட புள்ளிவிவர தகவல்களிலிருந்து தரவைப் பிரித்தெடுத்து, அதன் அடிப்டையில் 146 679 நபர்கள் கணக்கில் தவறப்பட்டிருக்கின்றார்கள் என எடுத்துக்காட்டியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் மிரட்டல்களையும்; அச்சுறுத்தல்களையும் தாண்டி தனது உயிருக்கஞ்சாது அவர் அந்த எண்ணிக்கையை டுடுசுஊ ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தார்.</p>
<p style="text-align: justify;">இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் நீதிக்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் எப்போதும் இடித்துரைத்து வந்தார்.</p>
<p style="text-align: justify;">&#8220;ஈழத்தமிழர்கள் உங்களை எப்போதும் மறவோம், அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப் ஆண்டகையே! நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியானீர்கள். சர்வவல்லவரின் தூதரே! இரக்கம், சுயநிர்ணய உரிமை, தன்னலமற்ற தன்மை, சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றின் முக்கியத்துவங்களை எங்களுக்கு உணர்த்தினீர். எங்கள் இனம், மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றைத் தாண்டி, எம்மை எவ்வாறு பிறர் மதிக்க வேண்டுமென நாம் நினைக்கின்றோமோ அது போல் நாமும்; மற்றவரை மதிக்க வேண்டுமென எமக்கு கற்பித்தீர். தாழ்ச்சியின் சிகரமான நீர் எங்களை பெருமைப்படுத்தினீர். எங்கள் பணிகள் மற்றும் மதிப்பீடுகள் மூலம் எங்களை உலகம் அறியும்படி செய்தீர். சமயத் தலைவர் பலர் இருப்பினும், நீங்கள்தான் &#8230; தமிழரின் விடிவெள்ளியாக நீங்களே தான் &#8230; இந்த உலகத்தை ஒன்று திரட்டி ஈழத்தமிழர்களுக்காக ஓர் தேசத்தை கட்டியெழுப்ப பாடுபட்டீர்கள்.&#8221;</p>
<p style="text-align: justify;">விடை பெறுங்கள் இராயப்பு ஜோசப் ஆண்டகையே! உங்கள் ஆன்மா எங்கள் இதயத்திலும்; உணர்விலும் உள்ளது. La lutte continue !!!</p>
<p><strong>உத்தியோகபூர்வ அறிக்கைகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)</strong></p>
<p><span style="color: #3366ff;"><strong><a style="color: #3366ff;" href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/01.04.2021-Press-Release-Rev-Rayappu_Tamil.pdf">தமிழ்</a></strong></span></p>
<p><strong><span style="color: #3366ff;"><a style="color: #3366ff;" href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/01.04.2021-Press-Release-Rev-Rayappu_EN.pdf" target="_blank" rel="noopener">ஆங்கிலம்</a></span></strong></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Mar 2021 17:00:47 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=1891</guid>

					<description><![CDATA[27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான  46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது. இத்தீர்மனத்தின் மூலம் தமிழீழ மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், சிறீலங்கா அரசு தோல்வியடைந்துள்ளது என்றும் பலர் தமிழ் பேசும் உலகில் விளித்துக்கொள்ளும் அவலத்தையும் நாம் பார்க்கின்றோம். இந்நிலையில் தமிழீழ மக்களின் மீது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழினவழிப்பிற்கு எதிராகவும், தமிழீழ&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="1891" class="elementor elementor-1891" data-elementor-settings="[]">
							<div class="elementor-section-wrap">
							<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-6f914df6 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="6f914df6" data-element_type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-6038a795" data-id="6038a795" data-element_type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
								<div class="elementor-element elementor-element-2fe89cca elementor-widget elementor-widget-text-editor" data-id="2fe89cca" data-element_type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
					<div class="elementor-text-editor elementor-clearfix">27.03.2021
<p style="text-align: justify;"><img decoding="async" loading="lazy" class=" wp-image-1656 alignright" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1-300x169.jpg" alt="" width="369" height="208" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1-300x169.jpg 300w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1-768x432.jpg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1-200x113.jpg 200w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1.jpg 1024w" sizes="(max-width: 369px) 100vw, 369px" />அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!!</p>
<p style="text-align: justify;">கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான<span class="Apple-converted-space">  </span>46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.</p></div></div></div></div></div></div></section></div></div> <a href="https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/#more-1891" class="more-link elementor-more-link"><span aria-label="Continue reading தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!">(more&hellip;)</span></a>]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழின அழிப்பினை தொடர்சியாக மூடிமறைக்கும் பிரித்தானியா!</title>
		<link>https://tamilmovement.com/658/</link>
					<comments>https://tamilmovement.com/658/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Feb 2021 23:25:33 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=658</guid>

					<description><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடத்தில் இருந்து பலத்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்று வந்திருந்தது. அந்தவகையில் 46வது கூட்டத்தொடரில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேரடியாக கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என 15.02.2021 அன்று முடிவெடுக்கப்பட்டு விவாதித்து வருவதாகவும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் நேரில் கலந்துகொள்ள முடியாதவிடத்தில் இணையவழி ஊடாக சிவில் சமூக அமைப்புக்களின்&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடத்தில் இருந்து பலத்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்று வந்திருந்தது. <span id="more-658"></span>அந்தவகையில் 46வது கூட்டத்தொடரில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேரடியாக கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என 15.02.2021 அன்று முடிவெடுக்கப்பட்டு விவாதித்து வருவதாகவும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் நேரில் கலந்துகொள்ள முடியாதவிடத்தில் இணையவழி ஊடாக சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்துகொள்ள முடியும்.<span class="Apple-converted-space"> </span></p>
<p style="text-align: justify;">கடந்த நவம்பர் 16ம் திகதி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா பொதுச்சபையில் இடம்பெற்ற முறைசாரா கூட்டத்தில் இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்தின் முன்மொழிவுகள் தொடர்பாக அதற்கு தலமை தாங்கும் பிரித்தானியா உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகள்<span class="Apple-converted-space">  </span>கலந்துரையாடி முடிவுகளை எடுத்து அன்றிலிருந்து அதுதொடர்பிலான செயல்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கத் தொடங்கிவிட்டனர். அதையடுத்து கடந்த தீர்மானங்களினை போன்று இதனையும் சிறீலங்கா அரசின் அனுசரனையுடன் நிறைவேற்றுவதனை நோக்காக கொண்டே<span class="Apple-converted-space">  </span>அத்தீர்மானத்தின் வரைபினை கடந்த வருடம் டிசம்பர் மாதமே சிறீலங்கா அரசிற்கும் அனுப்பியிருந்தனர்.<span class="Apple-converted-space"> </span></p>
<p style="text-align: justify;">அந்தவகையில் 46 வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் எமக்கான ஆதரவினைக் கோரி மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளினை இரண்டு மாதத்திற்கு முன்னரே நாம் தொடர்பு கொண்ட போது இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்திற்கான முன்மொழிவினை பிரித்தனியா தமக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரியப்படுத்தியிருந்தனர். பிரித்தானியாவினால் அனுப்பிவைக்கப்பட்ட அம் முன்மொழிவு குறிப்பிட்ட அந்த உறுப்பு நாடுகளைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் அந்த முன்மொழிவுகளில் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க வேண்டுமென்ற எந்தவொரு கோரிக்கையும் இடம்பெறவில்லை. அதனால் இம்முறையும் பிரிவு 2ன் கீழ் கொண்டுவரப்படும் தீர்மானம் எந்தவொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை. சிறீலங்கா அரசு கடந்த 12 வருடங்களாக எவ்வாறு காலத்தை இழுத்தடித்தார்களோ அதேபோன்றே இனிவரும் தீர்மானமும் இருக்கப் போகின்றது. இவ்வாறானதொரு நிலையில் பிரிவு 4ன் கீழ் இரண்டாவது தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு எந்தொவொரு நாடும் முன்வரவில்லை. இது தொடர்பில் உறுப்பு நாடுகளை நாம் தொடர்பு கொண்ட போது இலங்கை விடயத்தைப் பொறுத்தவரையில் பிரித்தானியாவே பொறுப்பாக இருப்பதால் அவர்கள் எதனை முன்மொழிகிறார்களோ அதனை தாம் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள். உதாரணமாக 19.02.2021 அன்று நெதர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி ஒருவருடன் தொடர்பு கொண்டு நாம் பேசியபோது பிரித்தானியாவுடன் தொடர்பு கொள்ளும்படியும் அவர்கள் எடுக்கும் முன்னெடுப்புக்களை தாம் நிச்சயமாக ஆதரிப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறானதொரு சூழலில்<span class="Apple-converted-space">  </span>46வது கூட்டத்தொடரில் பிரித்தானியாவினால் கொண்டுவரப்பட இருக்கும் புதிய தீர்மானத்தின் முன்வரைபு தற்போது வெளியாகியிருக்கின்றது. அதன் சாராம்சததைப் பார்க்கையில் வழமை போன்று நலிவான ஒரு தீர்மானமே வெளிவர இருக்கின்றது<span class="Apple-converted-space">  </span>எனப்புலப்படுகின்றது. அதாவது 18 மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள்<span class="Apple-converted-space">  </span>வரை கால அவகாசம் வழங்கப்பட இருக்கின்றது. இது கடந்த வருடம் நவம்பர் 16 நியூயோர்க்கில் இடம்பெற்ற முறைசாரா கூட்டத்தில் கலந்துகொண்ட நாடுகளின் தொடர்புகள் ஊடாக<span class="Apple-converted-space">  </span>எமக்கு ஏற்கனவே தெரியவந்திருந்தது. அதேவேளை இலங்கையில் பாதிக்கப்பட்டது யார் என குறிப்பிடாமல் இலங்கை முழுக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன எனவும் சமுதாயங்கள் பாதிக்கப்படுகின்றன எனவும் இத்தீர்மான வரைபில் குறிப்பிடுவதனூடாக தமிழின அழிப்பினை மூடிமறைத்து தமிழர்களுக்கான நீதியினை பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் மறுத்துவருகின்றன. மேலும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என இத்தீர்மானவரைபில் குறிப்பிடப்படுகின்ற அதேவேளை தமிழின அழிப்பு குறித்தோ தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தோ குறிப்பிடப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனை அளிக்கும் விடயமாக உள்ளது. அதேவேளை மிகவும் கீழ்த்தரமான விடயம் என்னவெனில் சிறீலங்கா அரசினால் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தினை (OMP) நல்லதொரு முன்னேற்றகரமான விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்கா அரசிடம் கையளித்த தமது உறவுகளைத்தேடி பல வருடங்களாகப் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் இதே அலுவலகம் நிராகரிக்கப்பட்டமை அனைவரும் அறிந்தே. இவ்வாறான செயல்பாடுகளை அவதானிக்கும் போது தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பினை தொடர்ந்தும் மூடிமறைக்கும் கோணத்திலேயே பிரித்தானியாவும் நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கின்றது என்று அப்பட்டமாக தெரிகின்றது. அந்தவகையில் தமிழீழ மக்களின் பிரச்சினை பின்னடைவை சந்திப்பதற்கும் மூடிமறைக்கப்படுவதற்கும் பிரித்தானியாவே முன்நின்று செயல்படுகின்றது. தன்னுடைய காலனித்துவ சிந்தனையில் தமிழர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்ளாத மனநிலையிலேயே பிரித்தானியா காணப்படுகின்றது. அதேவேளை இத்தீர்மானத்தில் சிறீலங்கா அரசு உள்ளக விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிடப்படுவதன் ஊடாக கொலையாளியே தன்னைத் தானே விசாரணை செய்யலாமென்ற பாணியில் வேடிக்கையான ஒரு விடயமும் குறிப்பிடப்;பட்டுள்ளது. அதேவேளை மனித உரிமைகள் ஆணையாளரின் குழுவிடம்<span class="Apple-converted-space">  </span>அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும் 49வது கூட்டத்தொடரில் முதல் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இரண்டாவது அறிக்கையினை அடுத்தவருடம் செப்டம்பரில் இடம்பெறும் 51 கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதிலுள்ளது. அதன் பின்னரே வேறு தீர்மானங்கள் தொடர்பில் தாம் சிந்தித்துப்பார்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் என்பது காலநீடிப்புக்கள் ஊடாக நீர்த்துப் போகச்செய்யப்படப் போகின்றது. இவ்வாறானதொரு சூழலில் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர்கள், குறிப்பாக பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள், மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களின் ஊடாகவும்<span class="Apple-converted-space">  </span>தமது எதிர்புகளை பதிவு செய்ய வேண்டும். ஆங்கில நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துவிட்டு அவர்கள் நாம் சொல்வதைத்தான் கேட்கிறார்கள் என்று சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும். அவர்கள்<span class="Apple-converted-space">  </span>தமிழர்களை தமது தேவைக்குப் பயன்படுத்துகிறார்கள். இதனை சரியாக விளங்கிக் கொண்டால் மாத்திரமே எமக்கான மாற்றங்களை நாம் ஏற்படுத்த முடியும்.</p>
<p style="text-align: justify;">அந்தவகையில் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலக பொறிமுறைக்குள் 9 ஒப்பந்த அமைப்புகளும் மற்றும் 44 சிறப்பு செயல்முறை பிரிவுகளும் உள்ளன. இந்தப் பகுதிகளை தமிழர்கள் இதுவரை பயன்படுத்தத் தவறிக் கொண்டிருக்கிறோம். இக்குறிப்பிட்ட 9 ஒப்பந்த அமைப்புகளுக்குள் பாதிக்கப்படும் தரப்புகள் தமது முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும். ஆனால் தமிழர்கள் அதற்குள் இதுவரை தமது முறைப்பாடுகளை பதிவுசெய்யவில்லை என்பதே நிதர்சனம். கடந்த இரண்டு மாத காலத்துக்குள் நாம் ஐ.நா வின் பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு அறிக்கையாளர்களுடன் முறைசாரா மற்றும் பொதுவான கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தோம். அக் கலந்துரையாடல்களின் ஊடாக எமது பக்கத்தினால் அனுப்பப்பட்ட குறிப்பிட்ட முறைப்பாடுகளை விடுத்து தமிழ் சமுதாயத்திடம் இருந்து எந்தவொரு முறைப்பாடுகளும் அங்கு போய்ச் சேரவில்லை என்பது அதில் கலந்துகொண்டோருக்கு தெரியவந்தது.</p>
<p style="text-align: justify;">அந்தவகையில் தமிழர் இயக்கமாகிய நாம் ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உட்பட மற்றும் பல தமிழ் அமைப்புகளுடன் கூட்டிணைந்து சிறப்பு அறிக்கையாளர்கள் எல்லோருக்கும் அனுப்பிய கோரிக்கை மனுக்களின் ஊடாக கேட்டுக் கொண்டதற்கிணங்க<span class="Apple-converted-space">  </span>இலங்கை விடயத்தில் முதல்தடவையாக ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஒன்றிணைந்து பெப்ரவரி 05ம் திகதி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எமது கோரிக்கையையும் குறிப்பிட்டிருந்தனர். இது தமிழர்களைப் பொருத்தவரையில் மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய ரீதியில் இதுவரையில் பதினொரு நாடுகளுக்கான சிறப்பு அறிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்த குறிப்பிட்ட நாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்புகள் அக் குறிப்பிட்ட நாடுகளில் இடம்பெற்ற<span class="Apple-converted-space">  </span>இன அழிப்புகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய தரவுகளை உடனுக்குடன் ஐ.நா வின் அனைத்துப் பொறிமுறைகளுக்குள்ளும் கொண்டுவந்து சேர்த்ததன் ஊடாகவே அவர்களால் அதனை சாத்தியப்படுத்த முடிந்தது. அவ் வகையில் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கச் செய்ய வைப்பது என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் அதி உச்சமாக இதனையே செயல்படுத்த முடியும். அதனைக் கூட ஐ.நா வில்<span class="Apple-converted-space">  </span>இலங்கை விடயத்திற்கு பொறுப்பான பிரித்தானியா கனடா தலைமையில் இயங்கும் இணை அனுசரனை நாடுகள் எமது விடயத்தில் வேண்டுமென்றே நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேல் குறிப்பிட்ட பதினொரு நாடுகளுக்கும் சிறப்பு அறிக்கையாளர்களை நியமிக்கச் செய்வதில் இதே மேற்கத்தேய நாடுகள் முன்நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் எமக்கான நீதி கிடைக்க வேண்டுமாயின் ஐ.நா மனித உரிமைகள் சபைக்குள் எமது பிரச்சினையை தொடர்ந்தும் பேசுபொருளாகக் கொண்டுவர வேண்டும். தற்பொழுது எமது பிரச்சினை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பிரிவு 2ன் கீழ் மட்டுமே விவாதிக்கப்பட்டுக் கொண்டிக்கிறது. அதனை நாம் எமது காத்திரமான செயல்பாடுகள் மூலமாக பிரிவு 4ன் கீழும் விவாதிக்கச் செய்யும்படி மாற்ற வேண்டும். அவ்வாறு இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு பிரிவு 4ன் கீழ் எமது பிரச்சினை விவாதிக்கப்படும் ஒன்றாக மாறும் இடத்தில், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் சிறப்பு அறிக்கையாளர் தனது அறிக்கையினை சமர்ப்பித்து அதுதொடர்பில் விவாதிப்பதற்கு ஒன்றரை மணித்தியாலத்திலிருந்து மூன்று நான்கு மணித்தியாலங்கள் வரையில் நேரம் ஒதுக்கப்படும். அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கும் தமிழர்கள் நாம் இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்வரவேண்டும்.<span class="Apple-converted-space"> </span></p>
<p style="text-align: justify;">கடந்த பல வருடங்களாக தமிழர் இயக்கமாகிய நாம் எம்முடன் இணைந்து செயல்படும் ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற எமது இணை அமைப்புக்களின் ஊடாக இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஒருவரினை நியமிக்க வேண்டும் எனவும் சிறீலங்கா அரசினை ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஊடாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.</p>
<p style="text-align: justify;"><a href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/02/21.02.2021-46.-UNHRC-Situation-Report.pdf">தமிழின அழிப்பினை தொடர்சியாக மூடிமறைக்கும் பிரித்தானியா!</a></p>
<p>&nbsp;</p>
<h4>Share</h4>
<style>
.bg-topbar1 {<br />
	 color:#000;<br />
	 font-size: 25px;<br />
         padding-left: 100px;<br />
         display: flex !important;<br />
	}<br />
</style>
<div class="bg-topbar1"><i class="fab fa-facebook-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-instagram" style="color: #000;"></i><br />
<i class="fab fa-twitter-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-whatsapp-square" style="color: #000;"></i></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/658/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரான்சில் தமிழ் சமூகத்திற்கு எதிராக பிரெஞ்சு ஊடகங்கள் பரப்புகின்ற அவதூறு குறித்த கண்டன அறிக்கை!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 21:57:03 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=738</guid>

					<description><![CDATA[பெப்ரவரி 17, 2021 அன்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த பொலிசாரின் தேடுதல்களைஅடுத்து ஐரோப்பா 1 என பெயர் கொண்ட பிரஞ்சு ஊடகம் கொடுத்த தகவல் பிரான்சிலே வாழுகின்ற தமிழர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மேலாளருக்குச் சொந்தமான இடத்திலே கண்டெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்படாத தங்கம் உருக்கும் செயல்பாடு குறித்த விசாரணையைப் பற்றி செய்தியிடும் போது குறித்த அவ் வானொலியின் ஊடகவியலாளர் உச்சரித்த வார்த்தைகள் பிரான்சில் வாழும் தமிழர்களுக்கு இழிவை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது.&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">பெப்ரவரி 17, 2021 அன்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த பொலிசாரின் தேடுதல்களைஅடுத்து<span id="more-738"></span> ஐரோப்பா 1 என பெயர் கொண்ட பிரஞ்சு ஊடகம் கொடுத்த தகவல் பிரான்சிலே வாழுகின்ற தமிழர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மேலாளருக்குச் சொந்தமான இடத்திலே கண்டெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்படாத தங்கம் உருக்கும் செயல்பாடு குறித்த விசாரணையைப் பற்றி செய்தியிடும் போது குறித்த அவ் வானொலியின் ஊடகவியலாளர் உச்சரித்த வார்த்தைகள் பிரான்சில் வாழும் தமிழர்களுக்கு இழிவை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை பற்றிய பிரஞ்சு செய்தி ஊடகங்கள் ஏதும் வாய் திறக்காத நிலையில் தமது சுதந்திரத்திற்கான தாகத்தில் தமிழ் பிரதிநிதிகளின் போராட்டங்கள் பற்றி முற்றிலும் தவறான தகவல்களை தொடர்ந்தும் பரப்பி வருவது வருந்தத்தக்கது.<span class="Apple-converted-space"> </span></p>
<p style="text-align: justify;">தங்களது ஊடக ஈர்ப்பை அதிகரிக்க இத்தகைய ஊடகவியலாளர்கள் இழிவான குறுக்குவழிகளை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக இந்த சம்பவத்தை பயங்கரவாதத்துடனும், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழீழப் விடுதலைப் புலிகளுடன் இணைப்பதன் மூலமும் இதற்கு பயங்கரவாத சாயம் பூசப்பார்க்கின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இன அழிப்பிலிருந்து தப்பி ஓடிய தமிழர்கள் புலம்பெயர்ந்து பிரான்சிற்கு குடியேறி 3 வது தலைமுறையாக 400,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இம் மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">பயங்கரவாத சட்டத்துடன் பொது உரிமைகள் சட்டத்தை இணைத்து பேசுவதை இந்த ஊடகங்கள் முதலில் நிறுத்த வேண்டும்.</p>
<p style="text-align: justify;">பிரான்சில் வாழும் 400,000 க்கும் மேற்பட்ட தமிழர்களின் உணர்வுதனை மதிக்குமாறு பிரஞ்சு ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் செய்திகளை வெளியிடும் விதத்தில் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p style="text-align: justify;">&#8220;கதை சொல்லும்&#8221; பாணியில் கண்மூடித்தனமாக இருந்து விடாதீர்கள் : தவறான சிங்கள புத்தியீவிகள் மற்றும் சிறீலங்கா அரசால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களால் கடந்த காலத்தில் &#8220;பயங்கரவாதி&#8221; என்ற வார்த்தையுடன் தமிழர்களை தொடர்புபடுத்தப்பட்டது என்பதற்காக, இவ்வாறே வரலாறு தொடர வேண்டும் என்றதல்ல. இதனால் பிரான்சில் 400,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்றல்ல. இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அநீதிக்கு எதிராகவும், சுதந்திரத்துக்காகவும் போராடி வருகின்றனர். இனவழிப்பிற்கு பலியானாலும் கண்ணியத்துடன் வாழும் மக்கள் எமது தமிழ் மக்கள். நட்பு, வரவேற்பு, விருந்துபசாரம் போன்ற உயரிய கொள்கைகள் கொண்ட ஓர் இனத்து மக்கள் நாங்கள். அன்றாட வாழ்க்கையின் விதிகளாக பரஸ்பர மரியாதை, நல்ல பழக்கவழக்கங்கள், கொள்கைகள் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றோம்.</p>
<p style="text-align: justify;">பிரான்சில் வாழும் 400,000 தமிழர்களையும், 5,000 க்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தகர்களையும், தமிழ் சங்கங்களையும் களங்கப்படுத்தியிருக்கும் இந்த ஊடக செய்தியை நாங்கள் கண்டிக்கின்றோம். பிரான்ஸ் நாங்கள் விரும்பி அமைத்துக் கொண்ட எங்கள் வாழ்விடம்: எனவே தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்தை அவதூறு பரப்பி அடமானம் வைக்க வேண்டாம்.</p>
<p style="text-align: justify;">தமிழர் இயக்கம் இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 3200 க்கும் மேற்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது. சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்து புலம் பெயர் தமிழர்கள் மேல் சுமத்த எத்தணிக்கும் பயங்கரவாத பிம்பத்தை ஆதரிக்க வேண்டாம் என பிரெஞ்சு ஊடகங்களுக்கு தமிழர் இயக்கம் அழைப்பு விடுக்கின்றோம். இதுவே 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சில் வாழும் தமிழர்களை நீங்கள் மதிக்கும் செயலாகும்.</p>
<p><a href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/18.02.2021-France.pdf">18.02.2021 &#8211; உத்தியோகபூர்வ அறிக்கை</a></p>
<p>&nbsp;</p>
<h4>Share</h4>
<style>
.bg-topbar1 {<br />
	 color:#000;<br />
	 font-size: 25px;<br />
         padding-left: 100px;<br />
         display: flex !important;<br />
	}<br />
</style>
<div class="bg-topbar1"><i class="fab fa-facebook-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-instagram" style="color: #000;"></i><br />
<i class="fab fa-twitter-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-whatsapp-square" style="color: #000;"></i></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இளைய தலைமுறையினரின் எழுச்சியை எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்திருக்கும் முள்ளிவாய்க்கால்!!!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Mon, 18 May 2020 21:39:09 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=730</guid>

					<description><![CDATA[தமிழீழத்தில் உலக வல்லாதிக்க கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத சிறீலங்கா இனவழிப்பு அரசினால் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட  எமது உறவுகளை உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவுகூறும் இன்றைய நாளில் தமிழருக்கெதிரான இவ் நூற்றாண்டின் பாரிய இனவழிப்புப் போர் நடந்தேறி 11 வருடங்கள் ஆகிய நிலையில் எமது மக்களின் முழுமையான இன விடுதலைக்கான போராட்டத்தினை தமிழர் நாம் ஓர் தேசமாக இணைந்து வலுவாக முன் நகர்த்தவேண்டிய வரலாற்றுக் கடமை எம் முன் சவாலாக விரிந்து நின்கின்றது. 2009 இல் தமிழீழத்தில்&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">தமிழீழத்தில் உலக வல்லாதிக்க கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத சிறீலங்கா இனவழிப்பு அரசினால் <span id="more-730"></span>இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட<span class="Apple-converted-space">  </span>எமது உறவுகளை உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவுகூறும் இன்றைய நாளில் தமிழருக்கெதிரான இவ் நூற்றாண்டின் பாரிய இனவழிப்புப் போர் நடந்தேறி 11 வருடங்கள் ஆகிய நிலையில் எமது மக்களின் முழுமையான இன விடுதலைக்கான போராட்டத்தினை தமிழர் நாம் ஓர் தேசமாக இணைந்து வலுவாக முன் நகர்த்தவேண்டிய வரலாற்றுக் கடமை எம் முன் சவாலாக விரிந்து நின்கின்றது.</p>
<p style="text-align: justify;">2009 இல் தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு<span class="Apple-converted-space">  </span>போரின் போது “<b>யுத்த</b><b> </b><b>தவிர்ப்பு</b><b> </b><b>வலயங்கள்</b><b>” </b>என அறிவிக்கப்பட்ட பகுதியில் தமக்குப் பாதுகாப்பு கிடைக்கும் எனத் தேடிச் சென்ற பொதுமக்கள் அங்கு<span class="Apple-converted-space">  </span>தமிழர் என்ற ஒரே காரணத்தினால் திட்டமிட்டு கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர். <b>போர்</b><b> </b><b>முடிவுக்கு</b><b> </b><b>வந்தபோது</b><b> </b><b>சிறீலங்கா</b><b> </b><b>அரச</b><b> </b><b>படைகளிடம்</b><b> </b><b>சரணடைந்த</b><b><span class="Apple-converted-space">    </span></b><b>பெருந்தொகையானவர்களுக்கு</b><b> </b><b>என்ன</b><b> </b><b>நடந்தது</b><b> </b><b>என்பது</b><b> </b><b>இதுவரையில்</b><b> </b><b>தெரியவில்லை</b>. மகாவம்ச சிந்தனையின் அடிப்படையில் இராணுவ அணுகுமுறையின் ஊடாக அனைத்தையும் அணுகும் சிறீலங்கா இனவழிப்பு அரசாங்கம் தாம் இழைத்த குற்றங்களுக்கு எச் சந்தர்ப்பத்திலும் பொறுப்புக் கூறப்போவதில்லை. <b>போர்க்</b><b> </b><b>குற்றவாளிகள்</b><b> </b><b>என</b><b> </b><b>ஐ</b><b>.</b><b>நா</b><b>. </b><b>வினாலும்</b><b> </b><b>சர்வதேசத்தினாலும்</b><b> </b><b>குற்றம்சாட்டப்பட்ட</b><b> </b><b>இராணுவ</b><b> </b><b>அதிகாரிகளை</b><b> </b><b>முக்கிய</b><b> </b><b>பதவிகளுக்கு</b><b> </b><b>நியமித்து</b><b> </b><b>வருகின்ற</b><b> </b><b>பேரினவாத</b><b> </b><b>சிறீலங்கா</b><b> </b><b>இனழிப்பு</b><b> </b><b>அரசின்</b><b> </b><b>சனாதிபதி</b><b> </b><b>அண்மைய</b><b> </b><b>கொரோனா</b><b> </b><b>கட்டுப்பாட்டு</b><b> </b><b>வாரியத்திற்கு</b><b> </b><b>கூட</b><b><span class="Apple-converted-space">  </span></b><b>இராணுவ</b><b> </b><b>அதிகாரி</b><b> </b><b>ஒருவரையே</b><b> </b><b>நியமித்திருந்தார்</b>. அனைத்தும் இராணுவமயமாக்கப்பட்டு அவ் அடக்குமுறைக்குள் திட்டமிட்டபடி <b>கட்டமைப்பு</b><b> </b><b>சார்</b><b> </b><b>தமிழின</b><b> </b><b>அழிப்பு</b><b> </b><b>இன்றும்</b><b> </b><b>தொடர்கின்றது</b><b>. </b>இவற்றையெல்லாம் சர்வதேச சமூகம் மெளனமாகவே வேடிக்கை பார்க்கின்றது.</p>
<p style="text-align: justify;">இவ்வாறனதொரு சூழலலில் பல இலட்சம் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்த பெளத்த பேரினவாத சிறீலங்கா இனவழிப்பு அரசிற்கெதிராக நாம் தொடர்ந்தும் அனைத்துலக அரங்கில் நீதிக்காக போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும். தமிழின அழிப்புப் போரால் பாதிக்கப்பட்ட எம் மக்களின் வாழ்வியலை மீள்கட்டியெழுப்பும் சமபொழுதில் முள்ளிவாய்க்காலில் வடிந்தோடிய குருதியின் நீதிக்கான சக்தியாக ஒன்றிணைந்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும்<span class="Apple-converted-space">  </span>தமிழீழத்தின் இறையாண்மையையும் பன்னாட்டு அரங்கிலே இடித்துரைக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">எம்மைப் போன்று அடக்குமுறைக்கு எதிராக போராடும் பிற இன மக்களோடு கைகோர்த்து நாம் பன்னாட்டு அரங்கிலே அநீதிக்கெதிரான மாபெரும் அணியாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னிறுத்த வேண்டும். ஆயுதம் தாங்கிய எமது போராட்டம் எவ்வாறு ஏனைய விடுதலைப் போராட்டங்களிற்கு முன் உதாரணமாக விளங்கியதோ, அதே போன்று எமது அரசியல் , அரசதந்திர போராட்டமும் உத்வேகத்துடன் ஏனைய போராட்டங்களிற்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும்.</p>
<p style="text-align: justify;">வேறொரு முள்ளிவாய்க்கால் உலகில் எவ்வினத்தவருக்கும் நிகழக் கூடாது என்ற பன்னாடுகள் தழுவிய ஓர் ஒருங்கிணைவு தமிழர், தமிழீழம் என்ற எல்லைக்கோடுகளை கடந்த நந்திக்கடல் கோட்பாடாய் புற்றுயிர்க்க வேண்டும்.<span class="Apple-converted-space"> </span></p>
<p style="text-align: justify;">2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு<span class="Apple-converted-space">  </span>நிகழ்ந்து 11 வருடங்கள் ஆகின்ற இவ் ஆண்டிலாவது நாம் விட்ட தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்று <b>&#8220;</b><b>நான்</b><b> </b><b>பெரிது</b><b> </b><b>நீ</b><b> </b><b>பெரிது</b><b> </b><b>என்று</b><b> </b><b>வாழாமல்</b><b> </b><b>நாடு</b><b> </b><b>பெரிதென்று</b><b> </b><b>வாழுங்கள்</b><b>. </b><b>நாடு</b><b> </b><b>நமக்குப்</b><b> </b><b>பெரிதானால்</b><b> </b><b>நாம்</b><b> </b><b>எல்லோரும்</b><b> </b><b>அதற்குச்</b><b> </b><b>சிறியவர்களே</b><b>, </b><b>எமது</b><b> </b><b>நிலையற்ற</b><b> </b><b>வாழ்விலும்</b><b> </b><b>பார்க்க</b><b> </b><b>நாட்டின்</b><b> </b><b>வாழ்வே</b><b> </b><b>பெரிது</b><b>&#8221; </b>என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தத்துவத்தை நெஞ்சில் நிறுத்தி எமது இனத்தின் ஒருமித்த கூட்டு இலக்குகளிற்காக ஒரு பொதுக் கொள்கையை முன்னிறுத்தி ஓர் தேசமாக எண்ணி சிந்தித்துச் செயற்பட வேண்டும்.காலத்துடன் ஒன்றிய செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்தியாக இருக்கின்ற எமது இளம் தலைமுறையினரை நாம் முன்நிறுத்திச் செயற்படவேண்டும். ஓர் தலைமுறை மாற்றமும், போராட்ட வடிவ மாற்றமும் தேவை என்பதை களத்திலும், புலத்திலும் உள்ள தலைமைகள் உணர்ந்து இளையோர்களிற்கு வழிவிட வேண்டும். ஏனெனில் அவர்களே எம் இனத்தின் எதிர்காலம். அதுவே முள்ளிவாய்க்காலில் வீரச்சாவும் மாணச்சாவுமேந்தியவர்களிற்கு நாம் செய்யும் சரியான காணிக்கையாக இருக்கும். அ<b>நீதியையும்</b><b>, </b><b>துரோகத்தையும்</b><b> </b><b>உட்கொண்டு</b><b>, </b><b>இனமொன்றின்</b><b> </b><b>சாவை</b><b> </b><b>அடைகாத்து</b><b> </b><b>தினம்</b><b> </b><b>தினம்</b><b> </b><b>கொதிக்கும்</b><b> </b><b>முள்ளிவாய்க்கால்</b><b> </b><b>இளந்</b><b> </b><b>தலைமுறை</b><b> </b><b>ஒன்றின்</b><b> </b><b>அற</b><b> <span class="Apple-converted-space">    </span></b><b>எழுச்சிக்காய்</b><b> </b><b>ஏக்கத்தோடு</b><b> </b><b>காத்திருக்கின்றது</b><b>. </b>விருட்சத்தின் விதையாய் எத்தனையோ உறவுகள் மண்ணில் புதையுண்டிருப்பினும் அவர்கள் நாளை மரமாய் மீண்டும் எழுவார்கள்.</p>
<p><a href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/18.05.2020-May-18-PR.pdf">18.05.2020 &#8211; May 18 ஊடக அறிக்கை</a></p>
<p>&nbsp;</p>
<h4>Share</h4>
<style>
.bg-topbar1 {<br />
	 color:#000;<br />
	 font-size: 25px;<br />
         padding-left: 100px;<br />
         display: flex !important;<br />
	}<br />
</style>
<div class="bg-topbar1"><i class="fab fa-facebook-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-instagram" style="color: #000;"></i><br />
<i class="fab fa-twitter-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-whatsapp-square" style="color: #000;"></i></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அனந்தி சசிதரனின் தமிழர் இயக்கம் மீதான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான தெளிவூட்டல்!!!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Feb 2020 21:19:32 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=720</guid>

					<description><![CDATA[தமிழர் இயக்கமாகிய நாம் தமிழீழத்தில்  எமது இறையாண்மையை வலியுறுத்தியும்,  சிறீலங்கா   இனவழிப்பு    அரசினால் தமிழீழத்தில்    மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்க்கும் மற்றும் தொடர்ந்தும் மேற்   கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பிற்க்கும் நீதி கோரி பன்னாட்டு அரசியற் தளங்களில் சர்வதேச சனநாயக   பொறிமுறைகளுக்கு உட்பட்டு தொலைநோக்குடன் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.  அதனடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளிற்க்காக குரல்கொடுப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இதுவரை அண்ணளவாக 600 இற்கும் மேற்பட்டவர்கள்&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">தமிழர் இயக்கமாகிய நாம் தமிழீழத்தில்<span class="Apple-converted-space">  </span>எமது இறையாண்மையை வலியுறுத்தியும்,<span class="Apple-converted-space">  </span>சிறீலங்கா <span class="Apple-converted-space">  </span>இனவழிப்பு<span class="Apple-converted-space">    </span>அரசினால் தமிழீழத்தில்<span class="Apple-converted-space">    </span>மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்க்கும்<span id="more-720"></span> மற்றும் தொடர்ந்தும் மேற் <span class="Apple-converted-space">  </span>கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பிற்க்கும் நீதி கோரி பன்னாட்டு அரசியற் தளங்களில் சர்வதேச சனநாயக <span class="Apple-converted-space">  </span>பொறிமுறைகளுக்கு உட்பட்டு தொலைநோக்குடன் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.</p>
<p style="text-align: justify;"><span class="Apple-converted-space"> </span>அதனடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளிற்க்காக குரல்கொடுப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இதுவரை அண்ணளவாக 600 இற்கும் மேற்பட்டவர்கள் தமிழர் இயக்கத்தின் ஊடாக அழைக்கப்பட் டுள்ளார்கள். இன்றைய சூழலில் ஐ.நா மனித உரிமைகள் அவை மற்றும் <span class="Apple-converted-space">  </span>ஐரோப்பிய <span class="Apple-converted-space">      </span>பாராளுமன்றம்<span class="Apple-converted-space">    </span>ஆகிய<span class="Apple-converted-space">    </span>இரு <span class="Apple-converted-space">  </span>இராசரீக தளத்திற்குள்ளும் பிரவேசிக்கும் <b>&#8220;ACCREDITATION&#8221; </b><b>என்று</b><b> </b><b>அழைக்கக்</b><b> </b><b>கூடிய</b><b> &#8220;</b><b>உள்நுழைவு</b><b> </b><b>அட்டையை</b><b>&#8221; </b>வழங்கக் கூடிய நிலையில் இயங்கும் ஒரே ஒரு புலம்பெயர் தமிழ் அமைப்பு தமிழர் இயக்கமே ஆகும். தமிழின அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரிற்கும் <span class="Apple-converted-space">  </span>உள் நுழைவு அட்டையை பெறுவதற்கான பொறுப்புத்துறப்புக் கடிதமும், தமிழீழம், தமிழகம் உட்பட<span class="Apple-converted-space">  </span>பன்னாடுகளில் இருந்து கலந்துகொள்பவர்கள் <b>VISA &#8211;</b><b>கடவு</b><b> </b><b>அனுமதி</b><b> </b><b>பெறுவதற்கான</b><b> </b><b>கடிதங்களும்</b><b> </b><b>மனிதநேயத்துடனும்</b><b>, </b><b>மனித</b><b> </b><b>உரிமைகள்</b><b> </b><b>தளத்தில்</b><b> </b><b>பணிபுரியும்</b><b> </b><b>பொறுப்புணர்வுடனுமே</b><b> </b><b>வழங்கப்</b><b> </b><b>பட்டது</b><b>. </b><b>இதுவே</b><b> </b><b>எதிர்காலத்திலும்</b><b> </b><b>எமது</b><b> </b><b>நடைமுறையாக</b><b> </b><b>இருக்கும்</b><b>.<span class="Apple-converted-space"> </span></b></p>
<p style="text-align: justify;"><span class="Apple-converted-space"> </span>அதன் அடிப்படையில் தமிழீழத்தின் வடமாகணத்தின் முன்னை நாள் மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அவர்களுடன் நீண்ட காலமாக தமிழர் இயக்கம் செயற்பட்டு வருவதுடன், அவரின் மக்களுக்கான செயற்பாடுகளிற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளது.<span class="Apple-converted-space">  </span>அவர் தனது செயற்பாடுகளை ஐ.நா சபை வரை வந்து செயற்படுத்துவதற்கான<b> VISA<span class="Apple-converted-space">  </span>&#8211; </b><b>கடவு</b><b> </b><b>அனுமதி</b><b> </b><b>பெறுவதற்கான</b><b> </b><b>கடிதம்</b><b>, &#8220;ACCREDITATION&#8221; </b><b>என்று</b><b> </b><b>அழைக்கக்</b><b> </b><b>கூடிய</b><b> </b><b>மனித</b><b> </b><b>உரிமைகள்</b><b> </b><b>சபைக்குள்</b><b> </b><b>உள்</b><b> </b><b>நுழைவதற்கான</b><b> &#8220;</b><b>உள்நுழைவு</b><b> </b><b>அட்டை</b><b>&#8220;<span class="Apple-converted-space">  </span></b><b>போன்றவற்றை</b><b> </b><b>வழங்கி</b><b> </b><b>வந்தோம்</b><b>.</b></p>
<p style="text-align: justify;">ஐ.நா மனித உரிமைகள் சபையின்<span class="Apple-converted-space">  </span>கூட்டத்<span class="Apple-converted-space">  </span>தொடரில் <span class="Apple-converted-space">  </span>கலந்து<span class="Apple-converted-space">  </span>கொண்டு உரையாற்ற வேண்டுமாயின்<span class="Apple-converted-space">  </span><b>ஐ</b><b>.</b><b>நாவின்</b><b> ECOSOC </b><b>அங்கீகாரம்</b><b> </b><b>பெற்ற</b><b> </b><b>பதிவு</b><b><span class="Apple-converted-space">  </span></b><b>செய்யப்பட்ட</b><b> </b><b>அமைப்பின்</b><b> </b><b>ஊடகவே</b><b> </b><b>உரையாற்ற</b><b> </b><b>முடியும்</b><b> </b><b>என்ற</b><b> </b><b>அடிப்படையில்</b><b> </b><b>உரையாற்றுவதற்கான</b><b> </b><b>வாய்ப்புக்களை</b><b> </b><b>இதுவரை</b><b> </b><b>காலமும்</b><b> </b><b>வழங்கிவருகின்றோம்</b><b>.</b> அந்தவகையில் மனித உரிமை சபையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான விதிமுறைகளை பின்பற்றி உரைகள் அமைய வேண்டியது அடிப்படையானது. <span class="Apple-converted-space">  </span>இந்த அடிப்படையிலே<span class="Apple-converted-space">  </span>விதிமுறைகளை<span class="Apple-converted-space">  </span>கவனத்தில் கொண்டே உரைகளை முன்பே மேற்பார்வை செய்வது வழமையான எமது நடைமுறையாகும்.</p>
<p style="text-align: justify;">எமது அமைப்பின் பன்னாட்டு இணைப்பாளர் பொஸ்கோ அவர்களே இவ்வாறான விடயங்களை கையாள்வது வழக்கமாகும் கடந்த சில நாட்களாக வேறு முக்கியமான பணிகளில் பொஸ்கோ அவர்கள் ஈடுபட்டு இருப்பதனால் இவ்விடயத்தை கையாளும் பொறுப்பு தமிழர் இயக்கத்தின் ஐ.நா விற்கான இணைப்பாளரான நிசா அவர்களிடம்<span class="Apple-converted-space">  </span>ஒப்படைக்கப்பட்டிருந்ததோடு கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனந்தி சசிதரன் உள்ளிட்ட அனைவருக்கும் நிசா அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு முற்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது.<span class="Apple-converted-space"> </span></p>
<p style="text-align: justify;">ஆனால் கூட்டத்தொடர் ஆரம்பித்து பிரதான அவையில் பேசுவதற்கான சந்தர்ப்பம் நெருங்கும் இறுதி நிமிடம்வரை அனந்தி சசிதரன் அவர்கள் நிசா அவர்களுடன் எவ்வித தொடர்பினையும் ஏற்படுத்தாமல் இருந்தது மட்டுமல்லாமல் எமது விடுதலைப் போராட்ட கோற்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட சில நபர்களின் ஊடாக உரையாற்றுவதற்கான சந்தர்பங்களை ஏற்படுத்துவதில் எமது இணை அமைப்பின்<span class="Apple-converted-space">  </span>உள்விவகாரங்களை தன்னிச்சையாக கையாண்டமை எமக்கு தெரியவந்ததை அடுத்தே எமது சக செயற்பாட்டாளர் ஒருவர் இது குறித்து அவரிடம் நாகரீகமான முறையிலே உரிமையுடன் வினவியபோது நீங்கள் ஒன்றும் எனக்கு சொல்லத் தேவையில்லை தானே பார்த்துக்கொள்வதாக தர்க்கமாக கூறியதோடு மறுபடியும் <b>எமது</b><b> </b><b>அமைப்பின்</b><b> </b><b>கோட்பாடுகளுக்கு</b><b> </b><b>எதிரான</b><b> </b><b>நிலைப்பாட்டைக்</b><b> </b><b>கொண்ட</b><b> </b><b>ஆங்கில</b><b> </b><b>நாட்டில்</b><b> </b><b>இயங்கும்</b><b> </b><b>ஒரு</b><b> </b><b>குறிப்பிட்ட</b><b> </b><b>அமைப்பின்</b><b> </b><b>பிரதிநிதியுடன்</b><b> </b><b>ஐ</b><b>.</b><b>நா</b><b> </b><b>வின்</b><b> ECOSOC </b><b>அங்கீகாரம்</b><b> </b><b>பெற்ற</b><b> </b><b>அமைப்புக்களுக்கு</b><b> </b><b>பொறுப்பான</b><b> </b><b>அலுவலகத்தில்</b><b> </b><b>எம்மைப்</b><b> </b><b>பற்றி</b><b> </b><b>உண்மைக்குப்</b><b> </b><b>புறம்பாக</b><b> </b><b>முறைப்பாடும்</b><b> </b><b>செய்துவிட்டு</b><b> </b><b>ஐ</b><b>.</b><b>நா</b><b> </b><b>முன்னறலிலுக்கு</b><b> </b><b>சென்று</b><b> </b><b>தமிழர்</b><b> </b><b>இயக்கத்தின்</b><b> </b><b>மீதும்</b><b> </b><b>அதன்</b><b> </b><b>செயற்பாட்டாளர்கள்</b><b> </b><b>தொடர்பாகவும்</b><b> </b><b>அவதூறு</b><b> </b><b>பரப்பும்</b><b> </b><b>விதமாகவும்</b><b> </b><b>பேசி</b><b> </b><b>காணொளி</b><b> </b><b>ஒன்றையும்</b><b> </b><b>வெளியிட்டிருந்தார்</b>.</p>
<p style="text-align: justify;">இத்தகைய சூழலில் இவ் விடையங்கள் எவற்றிலும் தொடர்புபடாத, நாம் சம்பந்தப்படாத கற்பனைக் கதைகளை காரணம் தெரிவித்து “ தமிழர் இயக்கம்” குறிப்பாக அதன் ஐ.நா. விடையங்களை கையாளும் எமது பிரதிநிதிகளான பொஸ்கோ மற்றும் நிசா பீரிஸ் அவர்களும் தன்னை அச்சுறுத்தியதாகவும், தனது பிரதான அவையின் பேச்சை திட்டமிட்டு நிறுத்தியதாகவும் பொய்யுரைத்துள்ளார்.<span class="Apple-converted-space"> </span></p>
<p style="text-align: justify;">தமிழர் இயக்கத்தின் மீதும் எமது செயற்பாட்டாளர்கள் தொடர்பாகவும் அவதூறு பரப்பும் நோக்குடன் அனந்தி சசிதரன் அவர்களினால் திட்டமிட்டு வெளியிடப்பட்ட காணொளி தொடர்பாக எம் முன் எழும் தார்மீகமான கேள்விகள்:</p>
<ul style="text-align: justify;">
<li><b></b><b>இவரை</b><b> </b><b>புறக்கணிக்க</b><b> </b><b>வேண்டும்</b><b> </b><b>என்ற</b><b> </b><b>திட்டம்</b><b> </b><b>இருந்திருந்தால</b><b> VISA &#8211; </b><b>கடவு</b><b> </b><b>அனுமதிக்கான</b><b> </b><b>கடிதத்தை</b><b> </b><b>நாம்</b><b> </b><b>ஏன்</b><b> </b><b>அனுப்பியிருக்க</b><b> </b><b>வேண்டும்</b><b>?</b></li>
</ul>
<ul style="text-align: justify;">
<li><b></b><b>எம்</b><b> </b><b>மீது</b><b> </b><b>திட்டமிட்டு</b><b> </b><b>முடுக்கிவிடப்பட்டுள்ள</b><b> </b><b>சில</b><b> </b><b>சதிகளில்</b><b> </b><b>இருந்து</b><b> </b><b>தமிழர்</b><b> </b><b>இயக்கத்தை</b><b> </b><b>தற்காத்துக்கொள்ள</b><b> </b><b>நாம்</b><b> </b><b>எடுத்த</b><b> </b><b>நடவடிக்கையை</b><b> </b><b>சற்றும்</b><b> </b><b>விளங்காமல்</b><b>, </b><b>அது</b><b> </b><b>தொடர்பான</b><b> </b><b>எமது</b><b> </b><b>பொறுப்பாளர்களிடம்</b><b> </b><b>கலந்தாலோசிக்காமல்</b><b> </b><b>தான்</b><b> </b><b>ஒரு</b><b> </b><b>முறை</b><b> </b><b>பேசமுடியாமல்</b><b> </b><b>போனதிற்கு</b><b> </b><b>நிதானமிழந்து</b><b> </b><b>அவசரகதியில்</b><b> </b><b>கற்பனைக்கு</b><b> </b><b>எட்டிய</b><b> </b><b>கதைகளை</b><b> </b><b>எல்லாம்</b><b> </b><b>சுட்டிக்காட்டி</b><b> </b><b>தமிழர்</b><b> </b><b>இயக்கத்தை</b><b> </b><b>பொதுவெளியில்</b><b> </b><b>குற்றவாளிக்</b><b> </b><b>கூண்டில்</b><b> </b><b>நிறுத்தும்</b><b> </b><b>அனந்தி</b><b> </b><b>சசிதரன்</b><b> </b><b>அவர்கள்</b><b>, </b><b>கடந்த</b><b> 6 </b><b>வருடங்களாக</b><b> </b><b>தமிழர்</b><b> </b><b>இயக்கமும்</b><b> </b><b>பொஸ்கோ</b><b> </b><b>அவர்களும்தான்</b><b> </b><b>அவரின்</b><b> </b><b>ஐ</b><b>. </b><b>நா</b><b> </b><b>மனிதவுரிமைகள்</b><b> </b><b>சபையின்</b><b> </b><b>செயற்பாடுகளிற்கு</b><b> </b><b>துணை</b><b> </b><b>நின்று</b><b> </b><b>செயலாற்றியதை</b><b> </b><b>மறந்தது</b><b> </b><b>எம்மை</b><b> </b><b>சற்று</b><b> </b><b>கவலைக்கு</b><b> </b><b>உட்படுத்தியுள்ளது</b><b>.</b></li>
</ul>
<p style="text-align: justify;">எமது செயற்பாடுகளை முடக்கவேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட வர்களின் தூண்டுதலிலேயே உண்மைக்கு மாறாக<span class="Apple-converted-space">  </span>ஆதாரமற்ற தரவுகளை கற்பனை செய்து<span class="Apple-converted-space">  </span>எம்முடன் எந்தவிதத்திலும் தொடர்பில்லாத நபர்களையும் யெனிவா என்ற புள்ளியில் நிறுத்தி இந்த கருத்தை<span class="Apple-converted-space">  </span>கூறியுள்ளது வேதனையளிப்பதோடு தமிழர் இயக்கம் தன்னை வேண்டுமென்றே புறக்கணித்ததாக அவர் கூறும் நேர்மையற்ற கருத்தை தமிழர் இயக்கம் முற்றாக மறுக்கின்றது.<span class="Apple-converted-space"> </span></p>
<p style="text-align: justify;">தமிழர் இயக்கமானது தமிழ் மக்களின் குரலாக தாயக, புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளின் பேராதரவோடு தமிழ் அறநெறிகளிற்கு உட்பட்டு கோட்பாடுடன் ஒத்துழைக்கும் அனைத்து தமிழ் அமைப்புக ளுடனும், தமிழர்களுடனும் இணைந்து பயணிக்கும் என்பதை இடித்துரைக் கின்றோம்.</p>
<p style="text-align: justify;">சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக பாரிய நகர்வுகளை நாம் மேற்கொண்டுள்ள இத்தருணத்தில் எம்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அனந்தி சசிதரன் போன்றவர்களின் இத்தகைய விசமப் பிரச்சாரங்கள் தமிழர் இயக்கத்தை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருந்து கருவறுக்கும் யுத்தியை கொண்டதாகும். இவை சிங்கள பேரினவாத அரசின் தமிழினவழிப்பு நிகழ்சி நிரலையே பலப்படுத்தும் என்பதில் எமக்கு எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை. அத்தோடு தாயகம் நோக்கிய எமது வேலைத்திட்டங்களிற்கு பல சவால்களிற்கு மத்தியிலும் தோளோடு தோள் நின்று உழைக்கும் அனைவரிற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெருவித்துக் கொள்கின்றோம்.</p>
<p><a href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/28.02.2020-Ananthi.pdf">உத்தியோகபூர்வமான அறிக்கை</a></p>
<p>&nbsp;</p>
<h4>Share</h4>
<style>
.bg-topbar1 {<br />	 color:#000;<br />	 font-size: 25px;<br />         padding-left: 100px;<br />         display: flex !important;<br />	}<br /></style>
<div class="bg-topbar1"><i class="fab fa-facebook-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-instagram" style="color: #000;"></i><br />
<i class="fab fa-twitter-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-whatsapp-square" style="color: #000;"></i></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கத்தலோனிய தனி நாட்டுக் கோரிக்கையாளர்களிற்கு எதிரான வழக்கில் சர்வதேச அவதானிப்பாளராக  தமிழர் இயக்கத்திற்கு அழைப்பு !!!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Feb 2020 21:52:08 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=735</guid>

					<description><![CDATA[Spain இல் தனிநாட்டு கோரிக்கையை முன்னிறுத்தி பொது  வாக்கெடுப்பு நடாத்திய கத்தலோனிய பிரதிநிதிகளை கைது செய்த Spain நாட்டு அரசு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. 12.02.2019 திங்கட்கிழமை அன்று ஆரம்பமாகிய இவ் வழக்கு, ஒரு மாத காலத்திற்கு இடம்பெறவுள்ளது. அவ் வகையில் இந்  நீதிமன்ற நடவடிக்கைகளில் சிறப்பு  கண்காணிப்பாளர்களாக சர்வதேச ரீதியாக, சுயாதீன துறைசார் நிபுணர்களிற்கு கத்தலோனிய அரசால் அழைப்பு  விடுக்கப்பட்டது. அதற்கேற்ப கத்தலோனிய அரசால், தமிழர் இயக்கத்திற்கும் விடுக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப, தமிழர் இயக்கத்தின்&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">Spain இல் தனிநாட்டு கோரிக்கையை முன்னிறுத்தி பொது<span class="Apple-converted-space">  </span>வாக்கெடுப்பு நடாத்திய கத்தலோனிய பிரதிநிதிகளை கைது செய்த Spain நாட்டு அரசு, <span id="more-735"></span>அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. 12.02.2019 திங்கட்கிழமை அன்று ஆரம்பமாகிய இவ் வழக்கு, ஒரு மாத காலத்திற்கு இடம்பெறவுள்ளது. அவ் வகையில் இந்<span class="Apple-converted-space">  </span>நீதிமன்ற நடவடிக்கைகளில் சிறப்பு<span class="Apple-converted-space">  </span>கண்காணிப்பாளர்களாக சர்வதேச ரீதியாக, சுயாதீன துறைசார் நிபுணர்களிற்கு கத்தலோனிய அரசால் அழைப்பு<span class="Apple-converted-space">  </span>விடுக்கப்பட்டது. அதற்கேற்ப கத்தலோனிய அரசால், தமிழர் இயக்கத்திற்கும் விடுக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப, தமிழர் இயக்கத்தின் ஆலோசகரும், நாம் தமிழர் கட்சியின் ஐ.நா மன்ற குழுத் தலைவருமான முனைவர் போல் நியூமன் அவர்கள் கடந்த 18.02.19 தொடக்கம் 22.02.19 வரை இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தார்.</p>
<p style="text-align: justify;">இச் சந்தர்ப்பத்தில், முனைவர் போல் நியூமன் அவர்கள் கத்தலோனியா அரசின் பிரதிநிதிகளுடன்,<span class="Apple-converted-space">  </span>ஈழத் தமிழர் விடயம் சார்ந்து பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.அவ் வேளையில்<span class="Apple-converted-space">  </span>தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு, ஈழத் தமிழர் இறையாண்மை<span class="Apple-converted-space">  </span>நிறுவதற்கான எமது பயணத்தில் கத்தலோனிய அரசு தமது முழு ஒத்துழைப்பை வழங்குமெனெ உறுதி அளித்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;">தமிழர் இயக்கமானது கடந்த பல வருடங்களாக கத்தலோனியா அரசுடன் பல்வேறுபட்ட சந்திப்புகளை மேற்கொண்டிருந்ததுடன், தமது இறையாண்மைக்காக போராடும் உலகின் பல்லின மக்களுடனும் ஒன்றிணைந்து ஐ.நா சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில்<span class="Apple-converted-space">  </span>செயற்பட்டுவருகின்றது.</p>
<p style="text-align: justify;">இதன் விளைவாகவே கத்தலோனிய அரசினாலும்,பார்சிலோனா மாநகரசபையினாலும் ஈழத் தமிழர் விடயம் சார்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.</p>
<p><a href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/21.02.2019-Madrid-Trial.pdf">21.02.2019 &#8211; Madrid Trial &#8211; ஊடக அறிக்கை</a></p>
<p>&nbsp;</p>
<h4>Share</h4>
<style>
.bg-topbar1 {<br />
	 color:#000;<br />
	 font-size: 25px;<br />
         padding-left: 100px;<br />
         display: flex !important;<br />
	}<br />
</style>
<div class="bg-topbar1"><i class="fab fa-facebook-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-instagram" style="color: #000;"></i><br />
<i class="fab fa-twitter-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-whatsapp-square" style="color: #000;"></i></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
